ETV Bharat / city

மக்களவைத் தேர்தலில் அதிமுக 39 இடங்களை கைப்பற்றும் - செங்கோட்டையன்

author img

By

Published : May 2, 2022, 9:24 AM IST

மக்களவைத் தேர்தலில் அதிமுக 39 இடங்களை கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மே தின பொதுக்கூட்டம்
மே தின பொதுக்கூட்டம்

ஈரோடு: சத்தியமங்கலம் திப்புச்சுல்தான் சாலையில் அதிமுக தொழிற்சங்கம் சார்பில் நேற்று (மே.1) மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தம் பேசுகையில், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறைவேற்றி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இதனிடையே மக்களவைத் தேர்தலில் அதிமுக 39 இடங்களை கைப்பற்றும் என்று கொட்டும் மழையில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உரை

திடீரென மழை பெய்ய ஆரம்பித்ததால், கூட்டத்திலிருந்து எழுந்து செல்ல முயன்ற தொண்டர்களுக்கு மக்காச்சோளம் கதிர் கொடுத்து அமரவைக்கப்பட்டனர். அதை சாப்பிட்டவாறு தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். இருப்பினும் சில தொண்டர்கள் மக்காச்சோளம் கதிரை வாங்கிக் கொண்டு மழை பெய்ததால் நடைடை கட்டினர்.

இதையும் படிங்க: 'சஞ்சீவி மலையை சுமந்த அனுமனைப்போல, மோடி இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்கத் தயார்' - அண்ணாமலை பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.