ETV Bharat / city

ஜோதிடத்தை நம்பி தாயும் மகளும் உயிரிழப்பு

author img

By

Published : Jan 6, 2022, 8:22 PM IST

Updated : Jan 6, 2022, 8:58 PM IST

ஜோதிடத்தை நம்பி மகளை விஷம் வைத்து கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயும் மகளும் உயிரிழப்பு
தாயும் மகளும் உயிரிழப்பு

கோயம்புத்தூர்: துடியலூர் அடுத்த அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி(58).

இவருக்கு சுகன்யா(30) என்ற மாற்றுத்திறனாளி மகளும், சசிக்குமார் என்ற மகனும் உள்ளனர். சசிக்குமார் திருமணமாகி சரவணம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(ஜன.4) சசிக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தனலட்சுமி, 'நான் ஜோதிடம் பார்த்தேன், அதில் எனக்கு கை, கால் இல்லாமல் போய்விடும் எனக் கூறினார்கள். நானும் சுகன்யாவும் இருப்பது உனக்கு பிரச்னை ஏற்படுத்தும். எனக்கும் ஜோதிடத்தில் சொன்னது போல் நடந்து விட்டால் எங்களைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. அதனால், தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

தாயும் மகளும் உயிரிழப்பு
தாயும் மகளும் உயிரிழப்பு

அவ்வாறெல்லாம் நடக்காது எனக் கூறிய சசிக்குமார், நேற்று(ஜன.5) தனலட்சுமியைப் பார்க்க செல்லலாம் என எண்ணி வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவரது அம்மா செல்போனை எடுக்கவில்லை.

பின்னர் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து வீட்டில் யாரேனும் இருக்கிறார்களா? எனப் பார்க்கும்படி கூறியுள்ளார்.

அவர் சென்று பார்த்த போது, தனலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாகப் பக்கத்து வீட்டுக்காரர், சசிக்குமாருக்கு இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.

உடனே அவர் வந்து பார்க்கையில், தனலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையிலும், சுகன்யா வாயில் நுரை தள்ளியபடியும் இருந்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

இது குறித்து துடியலூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சுகன்யாவிற்கு விஷம் கொடுத்துவிட்டு, தனலட்சுமியைக் கொலை செய்து விட்டு, தான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ஜோதிடத்தை நம்பி ஒரு தாயே தன் மகளைக் கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அம்மா உணவகம் மூடல்? - நல்லரசை நிறுவ நினைக்கும் ஸ்டாலினுக்கு இது அழகல்ல... ஏழைகளை நினைங்க!

Last Updated : Jan 6, 2022, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.