கோவை: கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பள்ளியை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், பள்ளியின் பேருந்துகளுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் இயக்கப்படாது என தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால், அனுமதியின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது என மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அறிவித்தது.
இருந்தபோதும் கோவை மாவட்டத்தில் இன்று 15 தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட போது, "இன்று இயக்கப்படாத பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும். பிறகு சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி கல்வித்துறை முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் : சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!