ETV Bharat / city

புனேவில் இருந்து சென்னை வந்தடைந்த கோவிஷீல்ட் தடுப்பூசிகள்

author img

By

Published : Aug 29, 2021, 5:28 PM IST

புனேவில் இருந்து ஐந்து லட்சத்து 48 ஆயிரத்து 380 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

புனேவில் இருந்து சென்னை வந்த கோவிஷீல்ட் தடுப்பூசிகள்
புனேவில் இருந்து சென்னை வந்த கோவிஷீல்ட் தடுப்பூசிகள்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

அதனடிப்படையில், நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் பொறுப்புடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

சென்னை வந்த தடுப்பூசிகள்

இந்நிலையில் புனேவில் இருந்து விமானம் மூலம் 46 பார்சல்களில் ஐந்து லட்சத்து 48 ஆயிரத்து 380 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

இதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம், சென்னை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள தடுப்பூசி சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள் இந்தத் தடுப்பூசிகளை தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் - மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.