ETV Bharat / city

18 இடங்களில் சேமிப்புக் கிடங்குகள் - அமைச்சர் காமராஜ் அறிவிப்பு!

author img

By

Published : Mar 19, 2020, 7:30 PM IST

சென்னை: 18 இடங்களில் சொந்த சேமிப்புக் கிடங்குகள் அமைக்க 62.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

eps
eps

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அமைச்சர் காமராஜ் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

1. சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சென்னை வடக்கு மற்றும் சென்னை தெற்கு என 28 லட்சம் ரூபாயில் பிரிக்கப்படும்.

2. மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒரு கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும்.

3. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சென்னை தெற்கு சரகத்தில் புதிதாக மதுரவாயல் மண்டலம் உருவாக்கி, உணவுப்பொருள் வழங்கல் உதவி ஆணையாளர் அலுவலகம் 74 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும்.

4. உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் மூலம் மாவட்ட அளவில் நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி 50 லட்சம் ரூபாயில் அளிக்கப்படும்.

5. 18 இடங்களில் 41500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சொந்த சேமிப்புக் கிடங்குகள் 62.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் கட்டப்படும்.

6. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரிசியில் உள்ள கருப்பு அரிசியை நீக்கும் அதிநவீன இயந்திரம் 18.90 கோடியில் நிறுவப்படும்.

7. திறந்தவெளி சேமிப்பு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் ஆகியவற்றில் சேமிக்கப்படும் உணவு தானியங்களின் ஈரப்பதத்தை ஆய்வு செய்வதற்கு, 200 எண்ணிக்கையிலான ஈரப்பத மானிகள் 70 லட்சம் ரூபாயில் கொள்முதல் செய்யப்படும்.

8. கிடங்குகளில் பூச்சிகள் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு 1000 எண்ணிக்கையிலான புற ஊதாக்கதிர் விளக்குப் பொறிகள் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

9. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்ய 500 எண்ணிக்கையிலான நெல் தூற்றும் இயந்திரங்கள் 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

10. தேனி மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 500 மெட்ரிக் டன்கள் அளவில் தலா 2.5 கோடி வீதம் 5 கோடி ரூபாயில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்படும்.

இதையும் படிங்க: துப்புரவுப் பணியாளர்கள் இனி ’தூய்மைப்பணியாளர்கள்’ - பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.