ETV Bharat / city

சாத்தனூர் அணை: தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

author img

By

Published : Jan 30, 2020, 3:56 PM IST

சென்னை: திருவண்ணாமலை மாவட்ட பாசன வசதிக்காக சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

dam
dam

இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அணையிலிருந்து 2019-2020ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள்வந்துள்ளன.

அதனையேற்று சாத்தனூர் அணையிலிருந்து 7,543 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இடது, வலது புறக் கால்வாய்களில் முறையே, 302.40 மி.க. அடி, 453.60 மி.க. அடி, ஆக மொத்தம் 756 மி.க. அடிக்கு மிகாமல் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை 35 நாள்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறந்துவிடவும், திருக்கோவிலூர், அணைக்கட்டு, பெண்ணையாறு, பாசன பழைய ஆயக்கட்டிற்கு 5,000 ஏக்கருக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு 1,200 மி.க. அடி நீரினை நீர்ப் பங்கீடு விதிகளின்படி பிப்ரவரி முதல் தேதி முதல் ஏப்ரல் மாதத்திற்குள், விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஒரே தவணையில் தேவைப்படும்பொழுது தண்ணீர் திறந்துவிடவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 12,543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 5 துறைகளின் புதிய கட்டடங்கள்: முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைப்பு!

Intro:சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவுBody:




சென்னை,                             முதலமைச்சர் திரு. எடப்பாடி
கே. பழனிசாமி வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

         திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2019-2020-ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அதனை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 7543 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலது புறக் கால்வாய்களில் முறையே
302.40 மி.க.அடி மற்றும் 453.60 மி.க.அடி ஆக மொத்தம் 756 மி.க.அடிக்கு மிகாமல் பிப்ரவரி 5 ந் தேதி முதல் மார்ச் 10 ந் தேதி வரை 35 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறந்துவிடவும் திருக்கோவிலூர் அணைக்கட்டு பெண்ணையாறு பாசன பழைய ஆயக்கட்டிற்கு 5000 ஏக்கருக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு 1200 மி.க.அடி நீரினை நீர்ப் பங்கீடு விதிகளின்படி பிப்ரவரி முதல் தேதி முதல் ஏப்ரல் மாதத்திற்குள் விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஒரே தவணையில் தேவைப்படும்பொழுது தண்ணீர் திறந்துவிடவும் ஆணையிட்டுள்ளேன்.



இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறச்சி மாவட்டங்களில் உள்ள 12543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என அதில் கூறியுள்ளார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.