ETV Bharat / city

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்: துணைவேந்தரை நியமனம் செய்யும் அதிகாரம் யாருக்கு?

author img

By

Published : May 5, 2022, 6:58 PM IST

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே, துணைவேந்தரை நியமனம் செய்யும் அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி இன்று(மே 05) பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கான அதிகாரம் அளிப்பதற்கான திருத்த சட்டமசோதவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, பேரவையில் இன்று(மே 05) அறிமுகம் செய்தார்.

குஜராத், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் துணை வேந்தரை, அரசின் இசைவுடன் வேந்தரால் நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதே போன்று 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதன்படி வேந்தர் என்பதற்குப் பதிலாக அரசு, என்று சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர் தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினாலோ, பல்கலைக்கழகத்தின் நலனுக்கு ஊறுவிளைப்பதாக அரசு கருதினால் மூன்று உறுப்பினர்களை நியமித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தம் மூலம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படுள்ளதால், முதலமைச்சர்தான் அரசு என்பதால் முதலமைச்சர் துணை வேந்தரை நியமனம் செய்வார். இந்த சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும்.

இதையும் படிங்க: 'அரசுப்பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு - நாளை ஒத்திவைப்பு!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.