ETV Bharat / city

4 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

author img

By

Published : Oct 15, 2021, 5:04 PM IST

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி கோரி 4 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் கடிதம்
முதலமைச்சர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய தொழில்களில் ஒன்றான பட்டாசு தயாரிப்பில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா 4 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும், உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:T-23 புலி பிடிபட்டது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.