ETV Bharat / city

அனுமதியை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 22 வழக்குகள் பதிவு!

author img

By

Published : Nov 4, 2021, 6:05 PM IST

அனுமதித்த நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தவர்கள் மீது இன்று நண்பகல் 1 மணி வரை போடப்பட்டுள்ள வழக்குகளின் நிலவரம் குறித்து காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வழக்குகள் பதிவு
வழக்குகள் பதிவு

சென்னை: அனுமதித்த நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இன்று நண்பகல் 1 மணி வரை போடப்பட்டுள்ள வழக்குகளின் நிலவரம் குறித்து, சென்னை காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கீழ்க்கண்ட காவல் நிலையங்களில் அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடித்ததாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • ராயப்பேட்டை - 2
  • ஐஸ் ஹவுஸ் - 3
  • கீழ்ப்பாக்கம் - 1
  • டி.பி. சத்திரம் - 3
  • அயனாவரம் - 1
  • ஓட்டேரி - 3
  • பேசின் பிரிட்ஜ் - 1
  • ஆவடி - 3

உள்பட 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: பழங்குடியின பெண் அஸ்வினி வீட்டிற்கு விசிட் அடித்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.