ETV Bharat / city

இந்து மகாசபா நிர்வாகி மீது பாலியல் புகார்

author img

By

Published : Jan 28, 2020, 10:57 AM IST

Updated : Jan 28, 2020, 11:09 AM IST

சென்னை: அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் மீது பாலியல் புகார் ஒன்று அளிக்கப்பட்டதையடுத்து அவர் தலைமறைவாகினார். இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

sexual harrassment case filed on hindu maga sabha administrator
sexual harrassment case filed on hindu maga sabha administratorம

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நிரஞ்சனி என்பவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 8ஆம் தேதியன்று அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்தார். அதன் பேரில் ஸ்ரீகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்து மகாசபா நிர்வாகி ஸ்ரீகண்டனின் மனைவி நான்சி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் தனது கணவரிடம் வேண்டுமென்றே 20 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, அதை திருப்பி கேட்டதற்குப் பாலியல் புகார் அளித்து இருப்பதாக நிரஞ்சனி மீது புகார் தெரிவித்தார்.

மேலும் நிரஞ்சனி தவறானவர் என்று கூறி, அவர் பலருடன் இருக்கக்கூடிய புகைப்படங்களையும் அப்போது வெளியிட்டார். தனது கணவர் நிரஞ்சனி போன்று பலருக்கு உதவி செய்து இருப்பதாகக் கூறிய நான்சி, அவர் மீது வேண்டுமென்றே பழிவாங்குவதற்காக இப்படியொரு புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்ரீகண்டன் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் ஸ்ரீகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்புதல் போன்ற மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிரந்தரமாக மூடப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ்

Intro:Body:அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி ஸ்ரீகண்டன் மீது மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு...

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நிரஞ்சனி என்பவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 08 ஆம் தேதியன்று அளித்த புகாரின் அடிப்படையில் அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி கோடம்பாக்கம் ஶ்ரீகண்டன் மீது பாலியல் புகார் உள்ளிட்ட 394 (b), 354 (A), 506(i), 509, மற்றும் 4இ TNPHW Act உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்...

இந்த நிலையில் இந்து மகாசபா நிர்வாகி ஸ்ரீகண்டன் மனைவி நான்சி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனது கணவரிடம் வேண்டுமென்றே 20லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு கேட்டதற்கு பாலியல் புகார் அளித்து இருப்பதாகவும் எனவே நிரஞ்சனி தவறான நடவடிக்கையை கொண்டவர் என்றும் அவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்...

அதே நேரத்தில் அவர் பலருடன் இருக்கக்கூடிய புகைப்படங்களையும் அவர் அப்போது வெளியிட்டார். தனது கணவர் நிரஞ்சனி போன்று பலருக்கு உதவி செய்து இருப்பதாகவும் ஆனால் இரண்டுமே தவறான நடத்தை கொண்டு வேண்டுமென்றே பழிவாங்கு வதற்காக இப்படியொரு புகார் அளித்திருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்...

இந்த நிலையில் தொடர்ந்து தன்னை சமூக வலைதளங்களில் ஶ்ரீகண்டன் இழிவு படுத்தி வருவதாகவும் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை பரப்பி வருவதாக இணையதளம் வாயிலாக கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையில் கடந்த 21ஆம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 506(i), 4 of TNPHW ACT -2002, மற்றும் 67 IT Act-2000 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் தலைமறைவாக உள்ளார் அவரை தொடர்ந்து தீவிரமாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்...Conclusion:
Last Updated : Jan 28, 2020, 11:09 AM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.