ETV Bharat / city

இ-பாஸ் முறைகேடு - அமைச்சர் எச்சரிக்கை!

author img

By

Published : Aug 3, 2020, 1:41 PM IST

சென்னை: இ-பாஸ் பெற்றுத் தருவதாக முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

udhayakumar
udhayakumar

சென்னையில் திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று(ஆகஸ்ட் 3) பார்வையிட்டார். அங்குள்ள களப்பணியாளர்களுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், 'தொழில்துறை நிறுவனங்கள் 75% பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. உணவகங்கள், வழிபாட்டு இடங்கள் போன்றவற்றிற்கும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் தொற்றின் வீரியம் குறையும் போது, மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்.

வெளியூர் செல்ல நியாயமான, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மக்கள் இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும். இ-பாஸ் பெற்றுத் தருவதாக யாரேனும் முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

இ-பாஸ் முறைகேடு - அமைச்சர் எச்சரிக்கை!

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.