ETV Bharat / city

நவ.1-ஐ மொழிவழி தேசியத்தை உறுதி செய்யும் நாளாக அங்கீகரிக்க வேண்டும் - திருமா கோரிக்கை

author img

By

Published : Nov 2, 2021, 12:52 PM IST

நவம்பர் ஒன்றாம் தேதியை மொழிவழி தேசியத்தை உறுதிபடுத்துகின்ற நாளாக அங்கீகரிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்

அரசு அங்கீகரிக்கக் கோரிக்கை வைத்தார்
"நவ. 1" யை மொழிவழி தேசியநாளாக

சென்னை: அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில், தமிழர் இறையாண்மை நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் தொல். திருமாவளவன் சிறப்புரையாற்றினார். பின், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாடு சட்டமன்றத்தில், தமிழ்நாடு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 ஆம் நாளை, "தமிழ்நாடு நாள்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது பொருத்தமானது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து மொழி அடிப்படையில் நவ. 1 ஆம் தேதியில் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா என்று பிரிக்கப்பட்டது. எனவே, நவ. 1 ஆம் தேதியை மொழிவழி தேசியத்தைப் உறுதிப்படுத்துகின்ற நாளாக அறிவிக்க வேண்டும்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த நாளாக, அரசு சார்பில் கொண்டாடும் வகையில் அதனை அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

மேலும், ஜூலை 18 ஆம் நாளை, தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவதற்கான அரசாணையை வெளியிடுவதற்கு முன், எல்லை மீட்புப் போராளிகள், தமிழறிஞர்கள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்து, ஒருமித்த கருத்துடன் பிற்காலத்தில் கருத்து முரண் ஏற்படாத வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

வன்னியர் இட ஒதுக்கீடு - நீதிமன்றம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்துள்ளத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. 10.5% இட ஒதுக்கீடு அவசர கோலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக அதிமுகவும் பாமகவும் இணைந்து அறிவித்துவிட்டார்கள்.

அதன் விளைவுகளை, அன்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சுட்டிக்காட்டியது. இந்த இட ஒதுக்கீடு சட்ட மசோதா தற்காலிகமானது தான் என்று அன்றைய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். எனவே, ஓட்டுக்காக ஆடிய நாடகம் என்று அப்போதே வெளிப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு - பயன் தருமா?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்த இட ஒதுக்கீடு சட்டம் இயற்றியது ஜனநாயகத்திற்கு எதிரானது. நீண்ட நாள் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டு வரும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசும், மாநில அரசும் முன்வர வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்த இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது பயனளிக்குமா என்பது கேள்விக்குறி தான். 69 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில், சமூகநீதி பாதிப்படையாத வகையில் உச்சநீதிமன்றத்தில் வாதாட அரசு தரப்பு, தயாராக இருக்க வேண்டும்.

இல்லம் தேடி கல்வி திட்டம்

"இல்லம் தேடி கல்வி திட்டம்" குறித்து முதலமைச்சர் அளித்த விளக்கத்தை நம்புகிறோம். கல்வி நிலையங்கள் மூலம் மதவாத சக்திகள் ஊடுருவாமல் தடுப்பதற்கு, அரசு உறுதியாக இருக்க வலியுறுத்தி வருகிறோம்.

இந்த விஷயத்தில், தமிழ்நாடு அரசு கவனமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆளுநர், அரசு துறை சார்ந்து கலந்தாய்வு செய்யலாம். ஆனால், தன்னிச்சையாக ஆய்வு நடத்துவது அச்சத்தை ஏற்படுத்தும்" என்றார்.

இதையும் படிங்க: அமைதியான பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.