ETV Bharat / city

சட்டவிரோதமாக என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்! - நளினி

author img

By

Published : Dec 21, 2019, 1:35 PM IST

சென்னை: அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்துள்ளதாக, ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி நளினி தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Rajiv murder case nalini move illegal detention case, illegal detention case, chennai high court notice to high court on rajiv case, சட்டவிரோதமாக என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்
Rajiv murder case nalini move illegal detention case

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,000க்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழ்நாடு அமைச்சரவை, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

'என்னையும் எனது கணவரையும் கருணைக் கொலை செய்யுங்கள்' - பிரதமருக்கு நளினி கடிதம்!

அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாள் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

நளினி உண்ணாவிரதம் குறித்து பரபரப்பு தகவல்கள்!

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு, ஜனவரி 7ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்ட நளினி!

Intro:Body:அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்துள்ளதாகக் கூறி, தன்னை விடுதலை செய்ய கோரி ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி நளினி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு புதிய மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடந்த 28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,000 மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாள் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை தன்னை விடுதலை செய்யமால் சட்டவிரோத அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு, ஜனவரி 7 ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்கும்படி
உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.