ETV Bharat / city

போராட்டம் தொடரும் - சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டவட்டம்!

author img

By

Published : Dec 18, 2019, 1:51 PM IST

சென்னை: மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.

university
university

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கடும் தாக்குதலைக் கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.

இதனால் பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்திக்கவோ, பல்கலைக்கழகத்திற்குள் நுழையவோ யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனிடையே, பல்கலைக்கழகத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் நடைபெறாது என்பதை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் முறையாக அறிவிக்கவில்லை என்றும், திடீரென விடுதியை காலி செய்து வீட்டிற்கு செல்லுமாறு மிரட்டுவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காவல்துறையை வைத்து அடையாள அட்டை சோதனை செய்யப்படுவதை கண்டிக்கும் மாணவர்கள், பாதுகாப்பு என்ற பெயரில் துணைவேந்தர் காவல்துறையை குவித்து வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் ஓயாது என சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'வரும் 23ஆம் தேதி, சென்னையில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி'

Intro:சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்
போராட்டம்
மாணவர்கள் உள்ளே அனுமதி இல்லை


Body:சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதனால் பல்கலைக்கழகத்தை சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் வெளியே வந்த பின்னர் உள்ளே யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தில் மூன்றுநாட்கள் வகுப்புகள் நடைபெறாது என்பதை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் முறையாக அறிவிக்கவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்களை திடீரென விடுதிகளை காலி செய்து கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு பல்கலைக்கழகம் மிரட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர். தற்போது நிலவி வரும் சூழலில் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் எவ்வாறு வீட்டிற்கு செல்ல முடியும் என மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பல்கலைக் கழக வளாகத்திற்குள அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

காவல்துறை பாதுகாப்பிற்கு துணைவேந்தர் ஏற்பாடு செய்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கடும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

காவல்துறை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் என்ன கூறினாலும் தங்களின் போராட்டம் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை நடைபெறும் என உறுதியாக தெரிவித்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.