ETV Bharat / city

பள்ளிகளின் உடற்கல்வி வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Aug 8, 2022, 3:50 PM IST

தமிழ்நாட்டின் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் உள்ள உடற்கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் உள்ள உடற்கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உடற்கல்வி வழங்கும் வகையிலான விதிகளை வகுக்க உத்தரவிடக்கோரி மதுரை திருப்பரங்குன்றத்தைச்சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், உடற்கல்வி என்பது மாணவர்களின் மேம்பாட்டுக்கு முக்கியமானது எனவும், தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் உடற்கல்விக்கான அடிப்படை வசதிகள் உள்ளன?, எத்தனை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர்?, மேலும், எத்தனை பள்ளிகளில் கழிப்பறை வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன?, உள்ளிட்ட விவரங்களை வழங்கக்கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் விண்ணப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த தகவல்களை அரசு வழங்கமறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா முன் அமர்வுக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : 'ஆளுநரிடம் அரசியல் பேசினேன், ஆனால்...' - ரஜினி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.