கர்நாடகா மாநிலம் பிடதி என்ற இடத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் 2003ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்குப் பிராணாசாமி என பெயர் சூட்டப்பட்டது. இதனிடையே, சமீபத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து அவரை சந்திக்கச் சென்ற தனக்கு பிடதி ஆசிரமத்தினர் அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்கக் கோரி அவரது தாய் அங்கம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
காப்பான் படம் வெளிக்கொணர்ந்த கதை: பூச்சித் தாக்குதல்... உருவானதா? உருவாக்கப்பட்டதா?
இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க ஈரோடு காவல் துறையினர், நித்தியானந்தாவிற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.