ETV Bharat / city

ஒன்றிய அரசின் உத்தரவால் சமூக நல வாரியம் கலைப்பு - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Sep 6, 2022, 6:22 PM IST

ஒன்றிய அரசின் உத்தரவால் சமூக நல வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஒன்றிய அரசின் உத்தரவால் சமூக நல வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்குப் பதிலாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது, தமிழ்நாடு அரசு.

சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது. மேலும் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோரின் பிரச்னைகளை களைவதற்கும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையிலும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராக கொண்ட வாரியம் அமைக்கப்பட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 10 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கைம்பெண்கள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில்முனைவோர்கள், பெண் விருதாளர்களும், வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் புதிய கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.