ETV Bharat / city

சென்னையில் சிறப்பு உதவி ஆய்வாளர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு!

author img

By

Published : May 18, 2019, 4:52 PM IST

சென்னை: பணி முடிந்து வீட்டிற்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் நெஞ்சு வலி காரணமாக சாலையில் மயங்கி உயிரிழந்த சம்பவம் காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு!

சென்னை ஆவடியைச் சேர்ந்த வெங்கடேசன் (57).பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார், இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உண்டு.

இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு போரூர் வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சாலையில் வாகனத்தை போட்டுவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸை வரவைத்து அவரை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவரது உறவினர்களுக்கும், பட்டாபிராம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் மருத்துவனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரின் பிரிவு குடும்பத்திற்கும், உடன் பணியாற்றிய சக காவலர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னையில் சிறப்பு உதவி ஆய்வாளர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு!
17.05.19
திருவள்ளுர்
ஆவடி_ஆ.கார்த்திக்

பணி முடிந்து வீட்டிற்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் நெஞ்சு வலி காரணமாக 
சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் காவலர்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது.


சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலையத்தில் 1.5 ஆண்டுகளாக பணிபுரிந்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஆவடி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் /57 (SSI 34754).
இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.இந்நிலையில் இவர்  காவல்துறை சேவை  பயிற்சிக்காக இரண்டு நாட்கள்  மவுண்ட் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.பின்னர்
பயிற்சியை முடித்து கொண்டு அவரது இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார்.அவர் போரூர் L&T தொழிற்சாலை அருகே வரும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.இதனை கண்ட பொதுமக்கள் அவரை 108 உதவியுடன்  சைதாப்பேட்டை ஜி.எச் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரின் உடல் அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டது.தகவல் அறிந்த பட்டாபிராம் காவல் நிலைய காவலர்கள் கண்ணியமிக்க மனிதரை நாங்கள் இழந்துவிட்டதாக   மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.