சென்னை ஆவடியைச் சேர்ந்த வெங்கடேசன் (57).பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார், இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உண்டு.
இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு போரூர் வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சாலையில் வாகனத்தை போட்டுவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸை வரவைத்து அவரை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவரது உறவினர்களுக்கும், பட்டாபிராம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் மருத்துவனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரின் பிரிவு குடும்பத்திற்கும், உடன் பணியாற்றிய சக காவலர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.