ETV Bharat / city

ஒரே நேரத்தில் 2 செல்போன்களைக் கொள்ளையடிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி!

author img

By

Published : Nov 6, 2019, 9:59 AM IST

சென்னை: பூவிருந்தவல்லியில் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களிடமிருந்து செல்போனைக் கொள்ளையடிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிக் கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

public trashed a guy

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, பேருந்து பணிமனை அருகே தனியார் கம்பெனி ஊழியர்களான விஜயகுமார், சாமிக்கண்ணு ஆகியோர் பணிக்கு செல்ல பேருந்தில் ஏற முயன்றனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், இரண்டு பேரிடமும் செல்போனைப் பறித்துவிட்டு தப்ப முயன்றார்.

இதையடுத்து அந்த நபரை பிடிக்க இந்த இளைஞர்கள் உட்பட பொதுமக்களில் சிலர் விரட்டி சென்றனர். அவர்களை கண்டு அஞ்சிய அந்த நபர் இருசக்கர வாகனத்தை ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு அருகில் இருந்த முட்புதருக்குள் மறைந்துகொண்டார். இதையடுத்து அவரைப் பிடித்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூவிருந்தவல்லி காவல் துறையினர் அந்த நபரை அடித்து காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் (20) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த காவல் துறையினர் அந்த நபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு செல்போன்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் 2 செல்போன்களைக் கொள்ளையடிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடிக் கொடுத்த பொதுமக்கள்!

மேலும் படிக்க : செல்ஃபோன் கடைகளில் நூதன முறையில் திருடும் இரண்டு இளைஞர்கள் !

Intro:பூந்தமல்லியில் வாலிபரிடம் செல்போன் பறித்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Body:பூந்தமல்லி நெடுஞ்சாலை, பஸ் பணிமனை அருகே தனியார் கம்பெனி ஊழியர்கள் விஜயகுமார் மற்றும் சாமிகண்ணு ஆகியோர் வேலைக்கு செல்ல பஸ்சில் ஏற முயன்றனர் அப்போது அந்த வழியே மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் இரண்டு பேரிடமும் செல்போனை பறித்து சென்றனர். இதையடுத்து அந்த நபரை பிடிக்க விரட்டி சென்றனர் விரட்டி வருவதை அறிந்து அந்த மர்ம நபர் அங்கிருந்த முட்புதருக்குள் மறைந்து கொண்டான். இதையடுத்து அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.Conclusion:இதையடுத்து சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி போலீசார் விரைந்து வந்து அந்த நபரை அடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அர்ஜீன்(20), என்பது தெரியவந்தது. அந்த நபரிடமிருந்து இரண்டு செல் போன்களையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் நடைபெற்ற வழிபறி சம்பவத்தால் பொதுமக்கள் பெரிதும் பயம் அடைந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.