ETV Bharat / city

'சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கிடையாது; ஆனால்...' - பாலச்சந்திரன்

author img

By

Published : Nov 18, 2021, 11:06 PM IST

புதுச்சேரி- சென்னை இடையே நாளை காலை 3 மணி முதல் 6 மணிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Balachandran
Balachandran

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை மையத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், "சென்னைக்கு 100 கி.மீ, புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விலக்கப்பட்டு, ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உள்மாவட்டம், இதர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் ஆகிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது 40-50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் நாளை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை கரையைக் கடக்கும்'' எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 775 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.