ETV Bharat / city

கீழடி தமிழர் வரலாற்றை மறைக்க மத்திய அரசு முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 27, 2019, 9:58 PM IST

சென்னை: கீழடி ஆராய்ச்சியில் வெளியாகும் தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருவதாக எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

சி.பா. ஆதித்தனாரின் 115ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ் மொழியை அழித்து ஒழிக்க வேண்டும் என்று பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பகவத் கீதையை கொண்டுவருவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். ராமாயணம், மகாபாரதம் போன்றவை புராண கதைகள்தான்.

ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை கொண்டுவந்திருப்பது அவர்களின் கல்வியை பாதிக்கும்படி இருக்கிறது. இதுபோன்ற பல்வேறு விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் நான்கு அடி பாய்ந்தால் அதிமுக எட்டு முதல் பதினாறு அடி பாய்கிறது.

கீழடியில் நடத்தப்படும் ஆராய்ச்சியின் முடிவுகளில் வெளிப்படும் தமிழர்களின் வரலாறு உலகத்துக்கே வியப்பை ஏற்படுத்திடும் வகையில் உள்ளது. அதனை மோடி அரசு மறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது. இதனை உணர்ந்து மக்கள் ஓரணியில் திரளவேண்டும். வருகின்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் அதற்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது" என்றார்.

Intro:Body:சி.பா.ஆதித்தனார் அவர்களின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " தமிழ் மொழியை அழித்து ஒழிக்க வேண்டும் என்று பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.

அண்ணா பல்கலை கழக பாடத்திட்டத்தில் பகவத் கீதையை கொண்டுவருவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். ராமாயணம்,மகாபாரதம் போன்றவைகள் புராண கதைகள் தான். 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை கொண்டுவந்து அவர்களின் கல்வியை பாதிப்பதாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் 4 அடி பாய்ந்தால் அதிமுக 8 அல்லது 16 அடி பாய்கிறது.

கீழடியில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் அதன் முடிவுகள் தமிழர்களின் வரலாறு உலகத்துக்கே வியப்பை ஏற்படுத்திடும் வகையில் உள்ளது அதனை மோடி அரசு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது. இதனை உணர்ந்து மக்கள் ஓரணியில் திரளவேண்டும்.

வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் அதற்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.