ETV Bharat / city

மாடியிலிருந்து காதலியை தள்ளிவிட்ட காதலன்... பாய் பெஸ்டியுடன் இருந்ததால் ஆத்திரம்..

author img

By

Published : Sep 8, 2022, 6:02 PM IST

காதலிக்கு நள்ளிரவு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்த போது அவரது வீட்டில் வேறொரு நபர் இருந்ததால் ஆத்திரத்தில் காதலியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட காதலனை தேடி வருகின்றனர்.

ஆண் நண்பருடன் இருந்த காதலியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட காதலன்
ஆண் நண்பருடன் இருந்த காதலியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட காதலன்

சென்னை: கேகே நகர் விஜயராகவபுரம் பகுதியில் வசிப்பவர் ஆஷாராவ்(26) எனும் பெண் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவர் குரோம்பேட்டையை சேர்ந்த மரடொனா(31) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று செப்டம்பர் 8ம் தேதி ஆஷாராவுக்கு பிறந்த நாள் என்பதால், சர்ப்ரைசாக வாழ்த்து சொல்ல நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு மரடோனா சென்றுள்ளார். கையில் பரிசுடன் சர்ப்ரைஸ் கொடுக்கச் சென்ற மரடோனாவுக்கு வேறொரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. தனது காதலிக்கு வேறொரு ஆண் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே ஆஷாவை பால்கனிக்கு அழைத்து சென்று இது குறித்து மரடோனா கேட்டுள்ளார். அதற்கு ஆஷா அவர் தனது நண்பர் என்று பதிலளித்துள்ளார். ஆனால் இதனை நம்பாத மரடோனா இருவருக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மரடோனா 10 அடி உயரமுள்ள பால்கனியில் இருந்து ஆஷாவை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆஷா வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் . பின்னர் இச்சம்பவம் குறித்து ஆஷா அளித்த புகாரின் பேரில் கே.கே. நகர் காவல்துறையினர் மரடோனாவை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொல்கத்தா ஜோடி சென்னையில் சடலமாக மீட்பு.. - காதல் பிரச்சனை காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.