ETV Bharat / city

சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை!

author img

By

Published : Jul 9, 2020, 3:26 PM IST

சென்னை: கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/09-July-2020/7955506_214_7955506_1594287989345.png
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/09-July-2020/7955506_214_7955506_1594287989345.png

தமிழ்நாடு முழுவதும், கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க. நகர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. இதன் பரவலைத் தடுக்க மாநகராட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது.

இது வரையிலும் மொத்தம் 72 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பரவலைத் தடுக்க, அடர்த்தியான பகுதிகளில் வாழும் மக்களை மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்ட மையங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது.

அங்குள்ள அனைவருக்கும் தினமும் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. இது வரையிலும் 49 ஆயிரத்து 587 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

ராயபுரம் - 7,340 பேர்

திரு.வி.க. நகர் - 3,993 பேர்

வளசரவாக்கம் - 2,385 பேர்

தண்டையார்பேட்டை - 6,149 பேர்

தேனாம்பேட்டை - 5,765 பேர்

அம்பத்தூர் - 2,078 பேர்

கோடம்பாக்கம் - 5,084 பேர்

திருவொற்றியூர் - 1,801 பேர்

அடையாறு - 3,069 பேர்

அண்ணா நகர் - 5,494 பேர்

மாதவரம் - 1,497 பேர்

மணலி - 869 பேர்

சோழிங்கநல்லூர் - 1,069 பேர்

பெருங்குடி - 1,076 பேர்

ஆலந்தூர் - 1,133 பேர்

மேலும் 1,146 பேர் இந்த கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ஒப்பாரி ராகமான இசை கலைஞர்களின் வாழ்வாதாரம்?'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.