ETV Bharat / city

தாய்லாந்து சென்ற சிறப்பு விமானத்தில் 220 பேர் பயணம்!

author img

By

Published : May 5, 2020, 8:45 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்துக்குச் சென்ற சிறப்பு விமானத்தில் 220 பேர் பயணம் செய்தனர்.

சென்னை விமானநிலையத்திலிருந்து தாய்லாந்துக்கு சென்ற சிறப்பு விமானத்தில் 220 பேர் பயணம்
சென்னை விமானநிலையத்திலிருந்து தாய்லாந்துக்கு சென்ற சிறப்பு விமானத்தில் 220 பேர் பயணம்

இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து பயணிகள் சுற்றுலா விசாவில் வந்தனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் சுற்றி வந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

மேலும் ஊரடங்கு உத்தரவை வருகின்ற மே மாதம் 17ஆம் தேதி வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள், மீண்டும் தங்கள் நாட்டிற்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூட்டான் உள்பட பல நாட்டிற்குச் சுற்றுலா வந்த பயணிகளை திரும்பி அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மேலும் தங்கி உள்ள வெளிநாட்டுப் பயணிகளை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தங்கியிருந்த, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு சிறப்பு விமானத்தில் 220 பேர் புறப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க:

மருத்துவ உபகரணங்களுடன் டெல்லி வந்தடைந்த ஸ்பைஸ் ஜெட் விமானம்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.