ETV Bharat / business

ஆகஸ்ட் 1, உங்கள் பர்ஸை பதம் பார்க்கும்!

author img

By

Published : Jul 31, 2021, 6:14 PM IST

மறவாதீர்கள்.. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நிதி விஷயத்தில் நீங்கள் கவனமாக செயல்படாவிட்டால் அது உங்கள் பர்ஸை பதம் பார்க்க வாய்ப்புகள் உள்ளன.

MONEY
MONEY

மும்பை: தனியார், பொதுத்துறை வங்கிகளில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. நீங்கள் கவனமாக செயல்படாவிட்டால், உங்கள் பர்ஸ் பதம் பார்க்கப்படலாம்.

கடந்த மாதம், ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி திட்டம் மூலம் ஆகஸ்ட் 1, 2021 முதல், வாரத்தின் அனைத்து நாள்களிலும் பணம் செலுத்தலாம் என அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், வங்கி விடுமுறை நாள்களில் கூட சம்பந்தப்பட்டவர்கள் வங்கிக் கணக்கில் தொகையை வரவு வைக்கலாம். இதனால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இது ஈவுத்தொகை, வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாற்றங்களை எளிதாக்குகிறது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் (ஐபிபிபி) சேமிப்பு கணக்கு வைத்திருந்து, வீட்டு வாசல் வங்கி சேவையை (டிஎஸ்பி) பெற விரும்பினால், சேவைகள் இனி இலவசம் அல்ல என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் 1, 2021 முதல், IPPB ஒவ்வொரு வாடிக்கையாளர் சேவைகளுக்கும் ரூ.20 மற்றும் பொருந்தக்கூடிய வரிகளை வசூலிக்கும். டிஎஸ்பி சேவைகளில் பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல், 24x7 பணப் பரிமாற்றம் மற்றும் பில் கொடுப்பனவுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

ஐசிஐசிஐ வங்கி கட்டணம்

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ பண பரிவர்த்தனைகள் மற்றும் ஏடிஎம் ஆகியவற்றுக்கான சேவை கட்டணங்களை திருத்தியுள்ளது. இலவச பண பரிவர்த்தனை வரம்பு ஒரு கணக்கிற்கு ஒரு மாதத்திற்கு தற்போதைய ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வங்கி ரூ.1,000 வரம்பிற்கு மேல் ரூ.1,000 ரொக்க பரிவர்த்தனைக்கு ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். ஐசிஐசிஐ அல்லாத ஏடிஎம்களில் பரிவர்த்தனைகள் தொடர்பாக, வாடிக்கையாளர்கள் 5 இலவச பரிவர்த்தனைகளை மட்டுமே பெற முடியும். அதிலும் 6 மெட்ரோ நகரங்களில் 3 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே கிடைக்கும். அதன்பிறகு, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ரூ. 20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ. 8.50 செலுத்த வேண்டும்.

ஏடிஎம் கட்டண உயர்வு

நிதி பரிவர்த்தனை பரிமாற்றக் கட்டணத்தை ரூ.15 லிருந்து ரூ.17 ஆகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 லிருந்து ரூ.6 ஆகவும் ரிசர்வ் வங்கி வசூலிக்க அனுமதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்த மாற்றம் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.

ஆக, வாடிக்கையாளர் ஒருவர் மற்ற வங்கியால் நடத்தப்படும் ஏடிஎம்-ஐப் பயன்படுத்தும் போது கட்டணம் வசூலிக்கப்படும்.

அந்த வகையில் ஒரு பரிவர்த்தனைக்கு கட்டணம் ரூ.20லிருந்து ரூ.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, இந்த மாற்றத்தை ஜனவரி 1, 2022 முதல் செயல்படுத்துமாறு வங்கிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சிலிண்டர் விலை

பொதுவாக, இண்டேன், ஹெச்பி போன்ற சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை ஜூலை 1ஆம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து எல்பிஜி விலை ரூ.115 உயர்ந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, எல்பிஜி விலை ஆகஸ்ட் 1 ஆம் தேதியும் திருத்தப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.