ETV Bharat / briefs

குண்டர் சட்டத்தில் இருவர் கைது- சிறையில் அடைப்பு

author img

By

Published : Jul 3, 2020, 4:42 PM IST

திருவண்ணாமலை: தொடர் கள்ளச்சாராய விற்பனை மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்டுவந்த இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Two people arrested
Two people arrested

திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் தாலுகா, வழுதலங்குணம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் பிரபாகரன்(33). இவர் மீது பலமுறை வழக்குப்பதிவு செய்தும் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, பஜார்பேட்டை, நேரு தெருவைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் சங்கர்(40) என்பவரை பலமுறை வழக்குப்பதிவு செய்தும் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சேத்துப்பட்டு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த இரண்டு நபர்களின் சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, பிரபாகரன், சங்கர் ஆகிய இரண்டு குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 60 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.