ETV Bharat / briefs

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 202ஆக அதிகரிப்பு - சுகாதாரத் துறை இயக்குனர்

author img

By

Published : Jun 16, 2020, 2:46 AM IST

புதுச்சேரியில் மேலும் 8 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு 202ஆக அதிகரித்திருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 202 ஆக உயர்வு - சுகாதாரத்துறை இயக்குனர்

புதுச்சேரியில் நேற்று (ஜூன் 15) சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”புதுச்சேரியில் 194 பேர் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் புதிதாக 8 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202ஆக அதிகரித்துள்ளது. 108 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்றூ மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேரும் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் என ஆகமொத்தம் 4 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர்.

புதுச்சேரி சேர்ந்த ஒருவர் சென்னை மற்றும் சேலம் பகுதியிலும், மாகே பகுதியை சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிகிச்சை பிரிவில் உள்ளனர். புதுச்சேரியில் கரோனா பாதிப்பில் 103 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.