ETV Bharat / bharat

Bye Bye KCR..! சூட்கேஸ் பரிசளித்த ஒய்.எஸ்.ஷர்மிளா..! கே.டி.ஆர்.ரியாக்‌ஷன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 5:11 PM IST

YS Sharmila gifted a suitcase to Chandrasekhar Rao: தெலங்கானா தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து தனது உடைமைகளை சந்திரசேகர ராவ் எடுத்துச் செல்வதற்காக ஒய்.எஸ்.ஷர்மிளா சூட்கேஸ் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

YSR Telangana Party leader YS Sharmila gifted a suitcase to Chief Minister K Chandrasekhar Rao
சூட்கேஸ் பரிசளித்த ஒய்.எஸ்.ஷர்மிளா

ஹைதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திரமாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா உருவானதில் இருந்து கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடத்தி வந்தது. சந்திரசேகர் ராவ் தேசிய அரசியிலில் ஈடுபடுவதற்காக கட்சியின் பெயரை பாரத ராஷ்டிரிய சமிதி என மாற்றம் செய்திருந்தார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா எனும் கட்சியை தொடங்கி தெலங்கானா அரசியலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தெலங்கானா மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சியைத் தக்க வைக்க பிஆர்எஸ் கட்சியையும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியும் கோதாவில் இறங்கின.

இந்நிலையில், தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா பெறும் வாக்குகள் காங்கிரசின் வெற்றியை பாதிக்கும் எனவும், தேர்தலில் வெற்றி பெறுவதை விட சந்திரசேகர் ராவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் முக்கியம் எனவும் கூறி, எந்த நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக தேர்தல் நெருங்கிய சமயத்தில் ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா தெரிவித்திருந்தார்.

ஒய்.எஸ்.ஷர்மிளாவின் இந்த திடீர் அறிவிப்பு காங்கிரசுக்கு சாதகமாக அமையும் என அரசியல் கூர்நோக்கர்கள் தெரிவித்தனர். மேலும், தென் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், நவம்பர் 30ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தின் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று இன்று (டிச.03) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னிலை பெற்று ஆட்சியைப் பிடிப்பது உறுதி ஆகிவிட்டது. இதனால் ஹாட்ரிக் ஆட்சியமைக்கும் கேசிஆரின் கனவிற்கு முட்டுகட்டை விழுந்தது.

முன்னதாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானா மக்கள் கேசிஆருக்கு டாட்டா காட்டுவதாக (Telangana people say Bye Bye KCR) ஒரு ஸ்டிக்கர் ஒட்டிய ட்ராலி ஒன்றை வைத்திருந்தார். அப்போது பேசிய அவர், “கருத்துக் கணிப்புகள் உண்மையாகிவிடும். இது கே.சி.ஆர் மற்றும் பி.ஆர்.எஸ்ஸின் எதேச்சதிகார மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிரான வாக்கெடுப்பு. டிசம்பர் 3ஆம் தேதி தெலுங்கானாவுக்கு கே.சி.ஆரின் கொடுங்கோல் பிடியில் இருந்து விடுதலை அளிக்கும் நாளாக இருக்கும்.

  • Grateful to the people of Telangana for giving @BRSparty two consecutive terms of Government 🙏

    Not saddened over the result today, but surely disappointed as it was not in expected lines for us. But we will take this in our stride as a learning and will bounce back…

    — KTR (@KTRBRS) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தங்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், காங்கிரஸை எளிதில் தோற்கடித்திருக்கலாம். ஆனால், கே.சி.ஆரை ஆட்சியில் இருந்து அகற்றுவதே தங்களது இலக்கு என்றும், அதனால்தான் காங்கிரஸை ஆதரித்ததாகவும் ஷர்மிளா தெரிவித்தார். மேலும், கர்நாடகாவிலும், கடந்த தெலுங்கானா தேர்தலிலும் எம்.எல்.ஏ.க்கள் எப்படி மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்கள் என்பதைப் பார்த்ததின் மூலம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற எனது முடிவு தெளிவாக பலனளித்துள்ளது.

10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இது மீண்டும் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. கடந்த இரண்டு தேர்தல்களிலும் கேசிஆர் 45 சட்டமன்ற உறுப்பினர்களை கேவலமாக விலைக்கு வாங்கினார். இந்த முறை அவர் பொது மக்களின் முடிவை ஏற்க வேண்டும்.

பிஆர்எஸ் மற்றும் அதன் ரகசிய கூட்டாளியான பிஜேபி இந்த தோல்வியை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். எம்எல்ஏக்களை கேவலமாக விலைக்கு வாங்க வேண்டாம். பாஜகவும் பிஆர்எஸ்ஸும் ஒன்றாக இருப்பதை தெலுங்கானா மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தங்களது பொதுக்கூட்டங்களில் கே.சி.ஆரை ஊழல் மிகுந்த முதலமைச்சர் என்று கூறியபோது, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டியை குறிவைத்த ஷர்மிளா, உத்தம் குமார் ரெட்டி, மல்லு பாட்டி விக்ரமார்கா (Mallu Bhatti Vikramarka) போன்ற தலைவர்கள் காங்கிரசால் முதல்வராக முடியும்” எனவும் குறிப்பிட்டார்.

தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி தோல்வியத் தழுவிய நிலையில், கேசிஆரின் மகனும், எம்.எல்.ஏவுமான கேசி.ஆர், “குறி தவறி விட்டது எனவும், இரண்டு முறை வாய்ப்பு வழங்கிய தெலங்கானா மக்களுக்கு நன்றி எனவும், இன்றைய முடிவைப் பற்றி வருத்தப்படவில்லை எனவும், ஆனால் அது எதிர்பார்த்த வகையில் இல்லாதது ஏமாற்றம் எனவும், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு மீண்டு வருவோம் எனவும், வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள்” எனவும் தெவிரித்து அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் 'கார்' வேகத்தை நிறுத்திய 'கை' - கேசிஆரின் 9 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.