ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: சிஏஏ குறித்து பேச்சால் என்டிஏ கூட்டணிக்குள் சலசலப்பு!

author img

By

Published : Nov 5, 2020, 7:58 PM IST

பாட்னா: பிகார் தேர்தல் பரப்புரையில் புதிய குடியுரிமைச் சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால், ஜே.டி.யு. - என்.டி.ஏ. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பிகார் தேர்தல் : சிஏஏ குறித்து பேச்சால் என்.டி.ஏ கூட்டணிக்குள் சலசலப்பு !
பிகார் தேர்தல் : சிஏஏ குறித்து பேச்சால் என்.டி.ஏ கூட்டணிக்குள் சலசலப்பு !

பிகார் மாநிலத்தின் ஜே.டி.யு. தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் மத்தியிலும் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இம்முறை நடைபெற்றுவரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு.வின் தலைமையில் பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணி களம் காண்கிறது.

இதன் காரணமாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜகவின் மூத்த தலைவர்கள் பிகாரில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று கதிஹார் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "நாட்டின் பாதுக்காப்பிற்கு கேடாக விளங்கிய ஊடுருவல் பிரச்னைகளுக்கு சிஏஏ (குடியுரிமை திருத்தச் சட்டம்), என்ஆர்சி வடிவத்தில் பிரதமர் மோடி தீர்வை அளித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் தீங்கு விளைவிக்கும் ஊடுருவல்காரர்களை விரைந்து முற்றுமுழுதாக வெளியேற்றப்படுவார்கள்" என்றார்.

இந்த பேச்சு பிகாரில் வாழ்ந்துவரும் சிறுபான்மையின மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஜே.டி.யூவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தலாம் என அரசியல் பார்வையாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் சிஏஏ, என்ஆர்சி குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாறுபட்ட பார்வையை அக்கட்சியின் தலைவரும், பிகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் இன்று வெளிபடுத்தியுள்ளார்.

அரேரியா மற்றும் கிஷன்கஞ்ச் மாவட்டங்களில் நடைபெற்ற பேரணிகளில் கலந்து கொண்டு பேசிய அவர், தான் என்றும் சிறுபான்மையின மக்களுடனே நிற்பாக மீண்டும் தெளிவுப்படுத்தினார்.

கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார், "நீங்கள் எல்லோரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். உங்களை யாரும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது.

எல்லோரையும் உடன் அழைத்துச் செல்வது நமது பண்பாடு. நாம் அனைவரும் ஒன்றாக இருக்கும்போதுதான் பீகார் முன்னேறும்" என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.