ETV Bharat / bharat

பசியால் இறந்த மூதாட்டி: நிர்வாகிகள் மறுப்பு

author img

By

Published : Mar 20, 2021, 6:32 PM IST

ஜார்கண்ட்: மந்தர் பகுதியில் 63 வயதான துகியா ஓரான் என்ற பெண் பட்டினி மற்றும் நோயால் இறந்ததாகக் கூறப்படுகிறது.

ஜார்கண்ட் செய்திகள்
பசியால் இறந்த முதாட்டி

ஜார்கண்ட் மாவட்டம், மந்தர் பகுதியில் துகியா (63) என்ற மூதாட்டி, பட்டினி மற்றும் தொற்று நோயால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது வீட்டில் போதுமான உணவு தானியங்கள் கிடைத்ததாக அப்பகுதி மக்கள் கூறியதை மாவட்ட அலுவலர்கள் மறுத்தனர்.

நாக்தா பஞ்சாயத்தில் வசிக்கும் அந்த மூதாட்டி, தனது சகோதரி மற்றும் 22 வயது மகளுடன் வசித்துவருவதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த மூதாட்டியின் உறவினர் சொத்தை அபகரித்துள்ளதால், அவர்கள் வீடற்ற நிலையில் இருந்தனர்.

பின்னர் அந்த மூதாட்டி, சுர்சா பஞ்சாயத்தில் வசிக்கத் தொடங்கினார். கடந்த 3 ஆண்டுகளாக, மந்தரைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர், தனது வீட்டில் அம்மூதாட்டிக்கு, ஒரு அறை கொடுத்திருந்தார். இந்நிலையில் அம்மூதாட்டிக்கு தொற்றுநோய் ஏற்பட்டது. அப்போது குடும்பத்தின் நிதி நிலை மோசமடைந்தது.

இதனால் அம்மூதாட்டியிடம் ரேஷன் கார்டுகளை வழங்குமாறு குடும்பத்தினர் பல முறை கேட்டதாக, உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அப்பகுதியின் வியாபாரி, அவர்களுக்கு 10 முதல் 15 கிலோ அரிசி வழங்குவார் என தெரிவித்தனர். இதற்கிடையில் சுலேமான் முண்ட்ரி (BDO) இந்த சம்பவத்தின் பின்னர் அம்மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டார்.

இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த ஆணின் உறுப்பை துண்டித்த பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.