ETV Bharat / bharat

இதயத்தை உலுக்கிய காணொலி.. உடனடி கைது தேவை.. வருண் காந்தி!

author img

By

Published : Oct 7, 2021, 3:05 PM IST

Updated : Oct 7, 2021, 3:22 PM IST

பாஜக எம்பி வருண் காந்தி வியாழக்கிழமை லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக காணொலி ஒன்றை பகிர்ந்து, “அனைவரின் இதயத்தையும் உலுக்கிய காணொலி, உடனடி கைது நடவடிக்கை தேவை” என வலியுறுத்தியுள்ளார்.

Varun Gandhi
Varun Gandhi

டெல்லி : லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக பாஜக எம்பி வருண் காந்தி பகிர்ந்துள்ள காணொலி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அந்தக் காணொலி தொடர்பான பதிவில், “லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏறிய காணொலி அனைவரின் நெஞ்சையும் உலுக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் உடனடி கைது நடவடிக்கை தேவை” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “காணொலி காட்சி மிகத் தெளிவாக உள்ளது. கொலை மூலம் போராட்டக்காரர்களை அமைதியாக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியும் கொந்தளித்து எழும் முன்னர், இந்த அப்பாவி விவசாயிகளின் கொலை மற்றும் இரத்தத்திற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடினார்கள். அப்போது உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றினார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மாநில அரசு நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது.

  • The video is crystal clear. Protestors cannot be silenced through murder. There has to be accountability for the innocent blood of farmers that has been spilled and justice must be delivered before a message of arrogance and cruelty enters the minds of every farmer. 🙏🏻🙏🏻 pic.twitter.com/Z6NLCfuujK

    — Varun Gandhi (@varungandhi80) October 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அப்போது, வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நாளைக்குள் (அக்.8) முழு விவர அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இது தொடர்பான காணொலி காட்சி ஒன்றையும் பிரியங்கா காந்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அதே காணொலி காட்சியை பாஜக எம்பி வருண் காந்தியும் வெளியிட்டுள்ளார். இது மிகத் தெளிவாக உள்ளது. அத்துடன், “உடனடி நடவடிக்கை தேவை” என்றும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : லக்கிம்பூர் வன்முறை; யார் யார் குற்றவாளிகள்? உச்ச நீதிமன்றம் கேள்வி!

Last Updated :Oct 7, 2021, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.