ETV Bharat / bharat

கங்குலியை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த மம்தா பானர்ஜி

author img

By

Published : Jan 28, 2021, 6:52 PM IST

கொல்கத்தா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலியை மேற்கு வங்க முதலமைச்சர் இன்று (ஜன.27) நேரில் சென்று சந்தித்தார்.

CM Mamata Banerjee
மம்தா பானர்ஜி

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி லேசான நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (ஜன.27) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று கங்குலியின் உடல்நிலைக் குறித்து அறிந்து கொண்டுள்ளார்.

கங்குலியை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று சந்தித்த மம்தா பானர்ஜி

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கங்குலி லேசான நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா உட்லண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:சௌரவ் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.