ETV Bharat / bharat

ஆந்திர மாநிலத்திற்கு புதிய தலைநகரம் அறிவிப்பு!

author img

By

Published : Jan 31, 2023, 2:11 PM IST

Updated : Jan 31, 2023, 2:18 PM IST

ஆந்திர மாநிலத்திற்கு இனி விசாகப்பட்டினம் தலைநகராக செயல்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கனா மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக இருக்கும் எனவும் அதற்குள் ஆந்திர மாநிலத்திற்கு தலைநகரை தீர்மானிக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக அறிவித்து அங்கு தலைமைச் செயலகம் உள்ளிட்ட கட்டுமான பணியை தொடங்கினார். ஆனால், அதன் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட பணிகளை கிடப்பில் போட உத்தரவிட்டதாக தெரிகிறது.

அதன் பிறகு ஆந்திரப் பிரதேசத்திற்கு மூன்று தலைநகரை உருவாக்கவும், நிர்வாகம், நீதி, சட்டமன்றம் என மூன்று இடங்களில் தலைநகரம் செயல்படுவதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகின.

  • #WATCH | "Here I am to invite you to Visakhapatnam which will be our capital in the days to come. I will also be shifting to Visakhapatnam in the months to come": Andhra Pradesh CM YS Jagan Mohan Reddy at International Diplomatic Alliance meet in Delhi pic.twitter.com/wANqgXC1yP

    — ANI (@ANI) January 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதனை உறுதிப்படுத்தும் வகையில் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராக அறிவித்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், விரைவில் தான் விசாகப்பட்டினத்தில் குடியேற உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Last Updated : Jan 31, 2023, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.