புதுச்சேரி: உழவர் கரைத் தொகுதி, மூலகுளம் குண்டுசாலைப் பகுதியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர்.
இங்கு குடியிருக்கும் மக்களை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வீடுகளைக் காலி செய்ய முயற்சித்த, பொதுப் பணித் துறையைக் கண்டித்து ஒருவாரத்திற்கு முன்பு அப்பகுதி மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் உடனடியாக வீடுகளைக் காலி செய்ய வேண்டும் எனக் கூறி வரும் பொதுப்பணித்துறையினரின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்தும், வீடுகளை அப்புறப்படுத்தி இடத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை, பொதுப்பணித்துறையும், ஆட்சியாளர்களும் கைவிடக்கோரியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்களும் விசிகவினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.