ETV Bharat / bharat

பிகாரில் காணாமல்போன சிறுவர்கள் சடலமாக மீட்பு

author img

By

Published : Mar 26, 2021, 7:00 PM IST

பாட்னாவில் காணாமல்போன சிறுவர்கள் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

Kidnapped children found dead in Bihar
Kidnapped children found dead in Bihar

பாட்னா: பிகார் மாநிலம் பாட்னாவிலுள்ள பிக்தா பகுதியைச் சேர்ந்த அனிஷ் குமார், ஷிவம் குமார் என்ற இரண்டு சிறுவர்கள் கடந்த மார்ச் 23ஆம் தேதி காணாமல்போனதாக காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகாரளித்தனர்.

இந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த காவல் துறையினருக்கு, பன்புன் ஆற்றங்கரையோரம் இரு சிறுவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவலர்கள், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பினர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல்போன சிறுவர்களுடையது என்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், குழந்தைகளின் வளர்ப்புத்தந்தை வினோத் குமார், நிலப்பிரச்சினை தொடர்பாக குழந்தைகளை கொலைசெய்தது தெரியவந்தது.

மேலும், அவர் காவல் துறையின் விசாரணையை முடக்குவதற்காக லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.