ETV Bharat / bharat

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

author img

By

Published : Nov 22, 2021, 7:36 AM IST

கனகன் ஏரி அருகே வீட்டில் கஞ்சா (cannabis) பதுக்கிவைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனை

புதுச்சேரி: திலாஸ்பேட்டை கனகன் ஏரி பகுதியில் கஞ்சா (cannabis) விற்பனை செய்வதாக கோரிமேடு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர் கனகன் ஏரி (Kanagan Lake) பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் வழுதாவூரைச் சேர்ந்த கார்த்தி (27), மணி (22) ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தனர்.

இதில் கஞ்சாவை சிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைதுசெய்து, ஒரு கிலோ கஞ்சாவைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இதையும் படிங்க: Goondas Act in chennai: சென்னையில் 351 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.