ETV Bharat / bharat

மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டுக்கொலை!

author img

By

Published : Jun 21, 2022, 9:54 PM IST

ஒடிஷாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

Odisha
Odisha

ஒடிஷா: ஒடிஷாவின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள பைசாதானி என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சிஆர்பிஎஃப் வீரர்கள் ஒரு ராணுவ முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு சென்றபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வீரர்கள் அவ்வழியாக செல்கிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வீரர்களில் ஒருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இரண்டு வீரர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு சற்று குறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.