ETV Bharat / bharat

லாரி மீது கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Apr 19, 2021, 6:24 AM IST

ஹைதரபாத்: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லாரி மீது கார் மோதி விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு
லாரி மீது கார் மோதி விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்திலுள்ள ஷம்ஷாபாத்தில் 30 செங்கல் தொழிலாளிகளை ஏற்றிச் சென்ற லாரியின் மீது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த நான்கு பேர் லாரிக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.