ETV Bharat / bharat

மராத்தா இட ஒதுக்கீடு: மனோஜ் ஜரங்கே பாட்டீல் உண்ணாவிரத்தை கைவிட சம்பாஜி பிடே கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 9:50 PM IST

Maratha Reservation Hunger Strike: மராத்தா இட ஒதுக்கீடு கோரி 15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மனோஜ் ஜரங்கே பாட்டீலை சந்தித்த சம்பாஜி பிடே, போராட்டத்தை கைவிடவும், மேலும் போராட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

sambhaji-bhide-meets-manoj-jarange-patil-to-end-fast-on-maratha-reservation
மராத்தா இடஒதுக்கீடு மனோஜ் ஜரங்கே பாட்டீல் உண்ணாவிரத்தை கைவிட சம்பாஜி பிடே கோரிக்கை

ஜல்னா (மகாராஷ்டிரா): மராத்தா இட ஒதுக்கீடு கோரி 15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மனோஜ் ஜரங்கே பாட்டீலை சந்தித்த சம்பாஜி பிடே, தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்திலுள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் மராத்தா சமூகத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவின் கீழ் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 15 நாட்களாக நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மும்பையில் உள்ள சஹ்யாத்ரி விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் மராத்தா இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டு, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜரங்கே பாட்டீல் போராட்டத்தை கைவிட வேண்டும் என அனைவரும் முடிவு செய்தனர். ஆனால், மனோஜ் ஜரங்கோ பாட்டீல் போராட்டத்தை கைவிடவில்லை.

இதையும் படிங்க: சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக் காவல் மனு ரத்து!

இந்த நிலையில் 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜரங்கோ பாட்டீலின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில் அவரை சந்தித்த ஷிவ்பிரதிஷ்தான் ஹிந்துஸ்தானின் நிறுவனர் மற்றும் தலைவரான சம்பாஜி பிடே உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

மேலும் மராத்தா இட ஒதுக்கீடு குறித்த நோக்கத்திற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். மேலும், முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் மராத்தா இட ஒதுக்கீடு குறித்து நல்ல முடிவை அறிவிப்பார்கள். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மனோஜ் ஜரங்கோ பாட்டீல் மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான உண்ணாவிரதப் போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் தொடர வேண்டும். அவை உடனடியாக பலனை அளிக்காது இருந்தாலும், அதன் வடிவம் மாறும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று (செப்.11) நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு பிறகு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, உண்ணாவிரதப் போராட்டத்தை மனோஜ் ஜரங்கோ பாட்டீல் கைவிடுமாறு தெரிவித்து இருந்தார். மகாராஷ்டிரா மாநிலம் முற்போக்கான மாநிலம், அனைத்து சமூகத்தின் இடையே நல்லிணக்கத்தையும், அமைதியையும் விரும்பகிறது எனவும் அவர் கூறினார்.

அதேபோல், அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும், தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அரசிற்கு கால அவகாசம் தேவை என்றும், மராத்தா இட ஒதுக்கீடு முடிவுகள் எடுப்பதற்கு நடைமுறைகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.