ETV Bharat / bharat

ராகுல்காந்திக்கு பாஸ்போர்ட் வழங்கலாம்.. டெல்லி நீதிமன்றம் உத்தரவு..

author img

By

Published : May 26, 2023, 7:50 PM IST

Updated : May 28, 2023, 6:45 AM IST

ராகுல்காந்திக்கு சாதாரண பாஸ்போர்டுக்கு அனுமதி வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராகுல்காந்திக்கு பாஸ்போர்ட்
ராகுல்காந்திக்கு பாஸ்போர்ட்

டெல்லி: முன்னாள் காங்கிரஸ் தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த ராகுல்காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் என அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதியாக உள்ள நபருக்கு 2 ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலோ சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர்கள் வகுத்திருக்கும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது சட்டம். இந்நிலையில் தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும், அவருக்கான அனைத்து சலுகைகளும் இழக்கப்பட்டது.

நாடு முழுவதும் பெரும் அரசியல் புயல் வீசிய இந்த விவகாரம் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள், மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்புவதாலும், அதனால் அவரை நாடாளுமன்ற வாசலில் கூட அனுமதிக்க விடாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் பாஜகவினர் பழி தீர்த்ததாக குற்றம் சாட்டினர். இந்நிலையில், இந்த தீர்ப்பின் எதிரொலியாக ராகுல் காந்தியின் பாஸ்போர்டும் பறிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல்காந்தி ஒரு வசனத்தை முன் மொழிந்தார். அதில் "நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல, உண்மையை பேச தயங்குவதில்லை" என துணிச்சலான பேச்சை முன்வைத்தார்.

இந்த அரசியல் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க தனக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி ராகுல்காந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவில் 10 ஆண்டுள் பயண்படுத்தும் வகையில் அந்த சாதாரண பாஸ்போர்ட் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் ராகுல் காந்தி மீது நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அவருக்கு 10 ஆண்டுகள் சாதாரண பாஸ்போர்டுக்கு அனுமதி வழங்க கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் மனு மீதான விசாரணை இன்று டெல்லி மாஜித்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்திக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால் அது 3 வருடத்திற்கு மட்டுமே எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படியே ராகுல்காந்தி அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், அங்கு ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுப்பேரணி ஒன்றில் பங்கேற்று பேச இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : May 28, 2023, 6:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.