ETV Bharat / bharat

"விவசாயிகளுடன் நான்" வேளாண் போராட்டத்திற்கு ராகுல் ஆதரவு

author img

By

Published : Jun 26, 2021, 3:47 PM IST

தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

ஒன்றிய அரசு கடந்தாண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்திய நிலையில், அதற்கு எதிராக விவசாயிகள் எட்டு மாதங்களுக்கு மேலாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு சட்டத்தை திரும்பப் பெறக்கோரி அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

ஏழு மாத நிறைவை குறிப்பிடும் விதமாக விவசாயிகள் இன்று (ஜூன் 26) டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். இந்த போராட்டத்தற்கு ஆதரவாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

  • सीधी-सीधी बात है-
    हम सत्याग्रही अन्नदाता के साथ हैं।#FarmersProtest

    — Rahul Gandhi (@RahulGandhi) June 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், "நாங்கள் சத்தியாகிரகிகள், உணவளிக்கும் விவசாயிகளுடன் துணை நிற்போம்" எனத் தெரிவித்துள்ளார். இந்த டிராக்டர் பேரணியை சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் ராகேஷ் திகெத் முன்னின்று நடத்துகிறார். பேரணி அமைதியான முறையில் நடைபெறும் என அமைப்பு உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.