இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரளாவில் உள்ள எனது சகோதரிகள், சகோதரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த ஈஸ்டர் வாழ்த்துகள்.
ஈஸ்டர் நாளன்று, ராகுல் காந்தியுடன் வயநாட்டில் பரப்புரைசெய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா காரணமாக என்னால் வர முடியவில்லை.
அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள். இந்த மாபெரும் மாநில மக்களுக்குச் சேவை உங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரளாவில் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரை!