ETV Bharat / bharat

Vande Bharat: சென்னை - கோவை வந்தே பாரத்.. டிக்கெட் விலை நிலவரம், மக்களின் கோரிக்கைகள் என்ன?

author img

By

Published : Apr 8, 2023, 1:14 PM IST

தலைநகர் சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் புதிய வந்தே பாரத் சிறப்பு ரயிலை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். தென் மாநிலங்களின் இரண்டாவது மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் 12-ஆவது அதிவேக விரைவு ரயிலின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

vande Bharat train
vande Bharat train

சென்னை : சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. நாட்டின் 12-ஆவது வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே இயக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஏப்.08) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து துவக்கி வைக்கிறார்.

தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில்(Vande bharat 20644) காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் ரயில்(Vande bharat 20643) இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும் எனக் கூறப்பட்டு உள்ளது.

திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாரத்தின் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இரு மார்க்கத்தின் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதிவேகத்தில் செல்லும் இந்த ரயில் 495 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சென்னை - கோவை பயணத்தை 5 மணி 50 நிமிடங்களில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடக்கத்தில் 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கவும் பயணிகளின் வரவேற்புக்கு ஏற்ப 16 பெட்டிகளாக உயர்த்தவும் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. குளிர்சாதன வசதி, சொகுசு இருக்கைகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 536 இருக்கைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏறத்தாழ 6 மணி நேரம் பயணம் கொண்ட இந்த ரயிலில் குளிர்சாதன வசதியுடன் கொண்ட முதல் வகுப்புக்கு 2 ஆயிரத்து 310 ரூபாயும், இரண்டாம் வகுப்புக்கு ஆயிரத்து 215 ரூபாய் டிக்கெட் விலை என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம் உணவு இல்லாமல் முதல் வகுப்புக்கு 2 ஆயிரத்து 116 ரூபாயும், இரண்டாம் வகுப்புக்கு 1,057 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மொத்தம் 450 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும், 56 முதல் வகுப்பு இருக்கைகளும் இந்த ரயிலில் உள்ளது. நாளை (ஏப்.9) தேதி இந்த ரயில் தனது முதல் சேவையை தொடங்க உள்ள நிலையில் டிக்கெட் விற்பனை நடைபெற்றது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 30 முதல் 40 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

இதனிடையே சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது சென்னைக்கு அடுத்ததாக சேலம் ரயில் நிலையத்தில் மட்டுமே நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் வேலூர் மாவட்டம் காட்பாடி, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, தருமபுரி மாவட்டத்தில் மொரப்பூர் அல்லது பொம்மிடி இரண்டில் ஏதேனும் ஒரு ரயில் நிலையம் என மாவட்டத்திற்கு ஓர் ரயில் நிலையத்திலாவது நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இது தொடர்பாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க : தைவானை மிரட்டும் சீனா - போர் பயிற்சியை நீடித்து அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.