ETV Bharat / bharat

கர்ப்பிணி மீது துப்பாக்கிச் சூடு - சிகிச்சை பலனின்றி பரிதாப பலி!

author img

By

Published : Apr 10, 2023, 1:30 PM IST

டெல்லியில் பாடல் சத்தத்தை குறைக் கோரிய கர்ப்பிணி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : வடக்கு டெல்லி புறநகர் பகுதியில் பாடல் சத்தத்தை குறைக்கக் கோரிய கர்ப்பிணி மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிர்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான ரஞ்சு. இவர் குடியிருக்கும் வீட்டின் மாடியில் கடந்த வாரம் சிலர் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு உள்ளனர்.

தூக்கம் கெட்டுப் போன கோபத்தில் மாடிக்கு சென்ற ரஞ்சு பாடல் சத்தத்தை குறைத்து ஒலிக்குமாறு இளைஞர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. திடீரென துப்பாக்கியை எடுத்த இளைஞர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

இதில் குண்டடி காயம் பட்ட ரஞ்சு சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரஞ்சுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால் ரஞ்சுவின் வயிற்றில் இருந்த 8 மாத சிசு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். ரஞ்சுவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், ரஞ்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். ரஞ்சுவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : பிபிசி - ட்விட்டர் மோதல்! "அரசு நிதிஉதவி பெறும் நிறுவனம்" பிபிசி ட்விட்டர் கணக்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.