ETV Bharat / bharat

வ.உ.சி 150ஆவது பிறந்தநாள் - புதுச்சேரியில் கட்சி தலைவர்கள் மரியாதை

author img

By

Published : Sep 5, 2021, 12:50 PM IST

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரியில் பல்வேறு கட்சித் தலைவர்கள், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.

puducheery news  puducheery latest news  voc statue  voc birthday  tribute to voc statue i  political leaders  political leaders pay tribute to voc statue  political leaders pay tribute to voc statue in puducheery  வ.உ.சி பிறந்தநாள்  வ.உ.சி பிறந்தநாள் கட்சித் தலைவர்கள் மறியாதை  வ.உ.சி  வ.உ.சி சிலைக்கு மறியாதை  புதுச்சேரியில் வ உ சி யின் சிலைக்கு மறியாதை  கட்சித் தலைவர்கள்  புதுச்சேரி செய்திகள்
வ.உ.சி

புதுச்சேரி: கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர்.5), புதுச்சேரி பாரதி பூங்காவில், அரசு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வ.உ.சியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கட்சித் தலைவர்கள் மறியாதை

இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, அங்குள்ள வ.உ.சியின் சிலைக்கு மாலை அணுவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமண நாராயணன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அக்கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் பூங்காவில் உள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: வ.உ.சி உருவப்படத்திற்கு மரியாதை செய்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.