ETV Bharat / bharat

வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்!

author img

By

Published : Dec 15, 2020, 9:16 AM IST

டெல்லி: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

narendra modi
narendra modi

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ பகுதிக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, சுத்திகரிப்பு ஆலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, தானியங்கி பால் பதப்படுத்தும் ஆலை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இன்று, குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, மாந்த்வி நகரில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்துக்காக உப்புநீக்கும் ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் வகையில் இந்த ஆலை அமைக்கப்படவுள்ளது.

நாட்டில் நிலையான, மலிவு நீர்வள அறுவடைக்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கட்ச் நகரின் வைகாக்கோட் கிராமத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைப்பதற்கான திட்டப்பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது 30 ஜிகாவாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க வழி வகுக்கும்.

அதனைத் தொடர்ந்து சர்ஹாத் அஞ்சரில் முழுமையான தானியங்கி பால் பதப்படுத்துதல் ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.120 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த ஆலை ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

இதையும் படிங்க: தேர்தல் விதிமீறல் புகார்: முதலமைச்சரிடம் விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.