ETV Bharat / bharat

நாடாளுமன்றத்தில் சூடுபிடிக்கும் பெகாசஸ்: இரு அவைகளும் தொடர் ஒத்திவைப்பு

author img

By

Published : Jul 20, 2021, 5:20 PM IST

Updated : Aug 13, 2021, 6:43 AM IST

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.

குளிர்கால கூட்டத்தொடர் 2021, பெகாசஸ் விவகாரம்
குளிர்கால கூட்டத்தொடர் 2021, பெகாசஸ் விவகாரம்

டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டுவந்ததால், மாநிலங்களவை 1 மணிவரையும், மக்களவை 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்னர், 1 மணிக்கு பின்னர் மாநிலங்களவை கூடியது. அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், விஜய்சாய் ரெட்டி எம்பி தலைமையில் ஆந்திராவிற்குச் சிறப்புத் தகுதி அளிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், அமளியில் ஈடுபட்டவர்களிடம் அமைதியாக இருக்கும்படி பலமுறை கேட்டுக்கொண்டார்.

கரோனா குறித்து விவாதம்?

இதன்பின் பேசிய பாஜக மாநிலங்களவைத் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல், "உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்றின் பாதிப்பு குறித்து விவாதிக்க இந்த அவை அனுமதிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த நாடே நம் விவாதத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மிக அவசியமான ஒன்றான கரோனா குறித்து நாம் விவாதித்தே ஆக வேண்டும்" என்றார். ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவந்தன.

31 மசோதாக்கள்

இந்தாண்டின் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 19) தொடங்கியது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நேற்று மாநிலங்களை மூன்று முறையும், மக்களவை இரண்டு முறையும் ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பேச்சு

இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் நிலையில், மொத்தம் 31 மசோதாக்கள் தாக்கல்செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெகாசஸ் சர்ச்சை: திருணமூல் காங்கிரஸ் எம்பி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

Last Updated : Aug 13, 2021, 6:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.