ETV Bharat / bharat

புதுச்சேரி அரசுப் பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்ட ஆணை: பொதுமக்கள் எதிர்ப்பு

author img

By

Published : Dec 18, 2020, 5:50 PM IST

புதுச்சேரி: அரசுப் பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்ட பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுப் பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்ட எதிர்ப்பு
அரசுப் பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்ட எதிர்ப்பு

புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அரசுப் பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (டிச.18) மடுகரை கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் முதலமைச்சர் வெங்கடசுப்பா ரெட்டியார் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு முன்னாள் முதலமைச்சர் வெங்கடசுப்பா ரெட்டியார் மகனும் எம்பியுமான வைத்திலிங்கம் வந்தார். பின்னர் அவர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.