ETV Bharat / bharat

UP Slap Video: சிறுபான்மை மாணவரை அறையச் சொன்ன ஆசிரியை மீது வழக்குப்பதிவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 6:26 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவரை, ஆசிரியை சக மாணவர்களை கொண்டு அறையச் சொல்லும் வீடியோ வைரலாக பரவிய நிலையில், ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
UP Slap Video

முசாபர் நகர் (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள குபாபூர் கிராமத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் திரிப்தி தியாகி (Tripti Tyagi) என்ற ஆசிரியை, 2ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவரை வீட்டுப்பாடம் செய்யாததற்காக சக மாணவர்களைக் கொண்டு அறையச் சொல்லும் வீடியோ ஒன்று நேற்று முதல் வைரலானது.

இதற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், வீடியோ ஆதாரம் மூலம் குற்றம் சாட்டப்பட்டு உள்ள பள்ளி ஆசிரியை திரிப்தி தியாகி மீது முசாபர் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். ஆனால், இந்த வழக்கு எந்தெந்த பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், தான் மாற்றுத்திறனாளி என்பதால் வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை எழுந்து சென்று தண்டிக்க முடியவில்லை என்றும், அதனாலேயே சக மாணவர்களைத் தண்டிக்கக் கூறியதாகவும் ஆசிரியர் திரிப்தி தியாகி கூறி உள்ளார். மேலும், இந்த வீடியோ திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் ஆசிரியை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • यूपी के एक स्कूल में जिस तरह एक अध्यापिका ने धार्मिक भेदभाव कर एक बच्चे को दूसरे बच्चों से पिटवाया है, वो BJP-RSS की नफ़रत भरी राजनीति का विचलित कर देने वाला परिणाम है।

    ऐसी घटनाएँ हमारी वैश्विक छवि पर कालिख पोत देती हैं। ये संविधान के ख़िलाफ़ है।

    समाज में सत्ताधारी पार्टी की…

    — Mallikarjun Kharge (@kharge) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே, இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “பாஜக-ஆர்எஸ்எஸ்-இன் வெறுப்பு நிறைந்த அரசியலின் முடிவாகவே இந்த உத்தரப்பிரதேச பள்ளியில் நிகழ்ந்த மதப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட சம்பவத்தில் ஆசிரியையின் குணம் வெளிப்பட்டு உள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. எந்த விதமான மதவெறியும், வன்முறையும் நாட்டுக்கு எதிரானது. குற்றம் செய்தவர்களை விடுவிப்பதும் நாட்டுக்கு எதிரானது” என குறிப்பிட்டு உள்ளார்.

  • मासूम बच्चों के मन में भेदभाव का ज़हर घोलना, स्कूल जैसे पवित्र स्थान को नफ़रत का बाज़ार बनाना - एक शिक्षक देश के लिए इससे बुरा कुछ नहीं कर सकता।

    ये भाजपा का फैलाया वही केरोसिन है जिसने भारत के कोने-कोने में आग लगा रखी है।

    बच्चे भारत का भविष्य हैं - उनको नफ़रत नहीं, हम सबको मिल…

    — Rahul Gandhi (@RahulGandhi) August 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இது குறித்து ராகுல் காந்தி தனது ‘X' வலைதளப் பதிவில் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். அதில், “அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாட்டு விஷத்தை விதைத்து புனிதமான பள்ளியை வெறுப்பு சந்தையாக மாற்றி உள்ளனர். நாட்டிற்கு இதைவிட மோசமான ஒன்றை ஆசிரியர் செய்துவிட முடியாது. இதே போன்ற மண்ணெண்ணைய்யை பாஜக, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரப்பி இந்தியாவை தீக்கிரையாக்குகிறது. குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். அவர்களுக்கு நாம் அன்பை மட்டுமே கொடுக்க வேண்டும், வெறுப்பை அல்ல” என தெரிவித்து உள்ளார்.

மேலும், இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் அசாசுதீன் ஓவைசி வெளியிட்டு உள்ள ‘X' பதிவில், “கடந்த 9 வருட கால தயாரிப்புதான், முசாபர் நகரில் இஸ்லாமிய சிறுவரை சக மாணவர்களைக் கொண்டு அறையக் கூறிய வீடியோவின் வெளிப்பாடு” என தெரிவித்து உள்ளார்.

அதேநேரம், இது குறித்து உத்தரப்பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் கூறுகையில், “மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் சமமான கல்வி மற்றும் வேலை என்பதே நமது அரசின் நோக்கம். இது தொடர்பான விசாரணை நடத்தப்படும். மேலும், இது தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்; ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.