இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட ஒமைக்ரான் பாதிப்புகள் மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில், பொது மக்கள் பொது இடங்களில் ஒன்று சேரவாய்ப்புள்ளது.
அதனைத் தவிர்க்கும் பொருட்டு, மும்பையில் டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 மாதங்களுக்குப்பிறகு 1 முதல் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த 144 தடை உத்தரவு பள்ளி வரும் மாணவர்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.